உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கில் 4 தனி தனி தீர்ப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு உள்ளது. இதில் 5ல் 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கி உள்ளனர். தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி எஸ். ரவீந்திர பாட் ஆகியோர் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளனர். 1980களின் இறுதியில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்டது. இதனாலேயே அப்போதைய பிரதமர் மறைந்த வி.பி.சிங், சமூக நீதி காவலராக இன்றும் கொண்டாடப்படுகிறார். ஆனால் இடஒதுக்கீடு வந்துவிட்டால் தாங்கள் ஏகபோகமாக அனுபவித்து வரும் இடங்கள் பறிபோகும் என பதறியது முற்படுத்தப்பட்டோர் பிரிவு. இதனால் மண்டல் கமிஷனின் ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு எதிராக வட இந்தியாவை பற்றி எரிய வைத்தனர். தீக்குளிப்பு சம்பவங்களும் நடந்தன. அப்போது இடஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டத்த