கரூர்: கல்குவாரியில் மண்சரிவு; 500 டன் எடையுள்ள ராட்சத பாறைகள் உருண்டு விபத்து... லாரி ஓட்டுநர் பலி



கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. அந்த வகையில், புன்னம் சத்திரம் அருகே உள்ள குப்பம் கிராமத்தில் உள்ள காங்கேயம்பாளையத்தில் என்.டி.சி என்ற தனியார் கல்குவாரி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முந்தினம் 12 மணி அளவில் டிப்பர் லாரி ஒன்றில் கற்களை ஏற்றிக்கொண்டு, சேங்கல் அருகே உள்ள பாப்பையம்பாடி பகுதியைச் சேர்ந்த சுப்பையா(41) என்பவர் கல்குவாரியில் இருந்து மேலே செல்ல வாகனத்தை இயக்கியுள்ளார். அப்போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்படி திடீரென ஏற்பட்ட திடீர் மண்சரிவு காரணமாக சுமார் 500 டன் கொண்ட ராட்சத பாறை ஒன்று எதிர்பாரதவிதமாக லாரியின் மீது உருண்டு விழுந்தது.

Comments

Popular posts from this blog