பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் 32வது போட்டியில் பஞ்சாப் அணியை அதன் பழைய பார்முக்குக் கொண்டு வந்த டெல்லி 115 ரன்களுக்குச் சுருட்டியது, பிறகு இலக்கை விரட்டிய போது வார்னர், பிரிதிவி ஷா 15ம் வாய்ப்பாடு சொல்லி அடித்தனர். ரபாடா, வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங் என்று ஒருவரையும் விட்டு வைக்கவில்லை கடைசியில் 10.3 ஓவர்களில் 119/1 என்று பஞ்சாபை கிழித்து தொங்க விட்டது டெல்லி கேப்பிடல்ஸ். பஞ்சாப் கிங்ஸ் முந்தைய ஐபிஎல் வடிவங்களில் இப்படித்தான் ஆடும், அந்த பார்முக்கு மீண்டும் டெல்லி அவர்களை கொண்டு வந்து விட்டனர். பனுகா ராஜபக்ச என்ற இலங்கை வீரர் பிரமாதமாக ஆடிவந்தார், அவரை திடீரென உட்கார வைத்து விட்டனர், இதனால் பேட்டிங் வலுவிழந்து போனது. பவுலிங்கில் அக்சர் படேல், குல்தீப் யாதவ், கலீல் அகமது மற்றும் பேட்டிங்கில் டேவிட்... விரிவாக படிக்க >>